Connect with us

Raj News Tamil

மெட்ரோ ரயில் பணியின்போது ராட்சத கிரேன் வீட்டின் மீது மோதி விபத்து!

தமிழகம்

மெட்ரோ ரயில் பணியின்போது ராட்சத கிரேன் வீட்டின் மீது மோதி விபத்து!

மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது ராட்சத கிரேன் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சென்னை போரூர் அஞ்சுகம் நகரில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பணியில் ஈடுபட்டிருந்த இயந்திரம் பார்த்தியநாதன் என்பவரின் வீட்டின் மீது மோதி சேதம் அடைந்தது. அடுத்து வீட்டில் இருந்த பார்த்தியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே ஓடினர்.

ராட்சத இயந்திரம் வீட்டின் மீது மோதியதை அடுத்து பூகம்பம் வந்ததாக நினைத்து மற்ற வீடுகளில் இருந்தவர்கள் வெளியேறினர். ராட்சத இயந்திரம் மோதியதில் வீட்டில் இருந்த பீரா, கட்டில், பேன் போன்ற உடமைகள் சேதமாகின.

உயரமான இயந்திரத்தை கையாண்ட ஆபரேட்டர் வீட்டை கவனிக்காமல் செயல்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தை தொடர்ந்து மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவன ஊழியர்களை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

More in தமிழகம்

To Top