Connect with us

Raj News Tamil

அண்ணாமலைக்கு எதிராக பேசியதால் கொலை மிரட்டல் – எஸ்.வி சேகர் காவல் நிலையத்தில் புகார்

தமிழகம்

அண்ணாமலைக்கு எதிராக பேசியதால் கொலை மிரட்டல் – எஸ்.வி சேகர் காவல் நிலையத்தில் புகார்

கடந்த சில தினங்களாகவே தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கூறி நடிகர் எஸ்.வி சேகர் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது : கடந்த சில தினங்களுக்கு முன்பு என்னை செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்கள் கூறுவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் ஆபாசமாக தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார்.

நான் ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்துள்ளேன். ஆனால் அண்ணாமலை கவுன்சிலர் கூட ஆகவில்லை, அவருக்கு ஆதரவாக எனக்கு கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். என்னுடைய வீட்டில் ஏற்கெனவே 2 முறை பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடந்தது. எனக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை நேற்று திரும்ப பெற்றுக் கொண்டனர். எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் போலீஸாரே பொறுப்பு என அவர் கூறியுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top