Connect with us

நடுவானில் திறந்த விமானத்தின் கதவு: பயணிகள் அதிர்ச்சி

உலகம்

நடுவானில் திறந்த விமானத்தின் கதவு: பயணிகள் அதிர்ச்சி

அமெரிக்காவில் நடுவானில் பயணித்த விமானம் ஒன்றின் கதவு திடீரென திறந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். இதனையடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

அமெரிக்காவின் போர்ட்லாண்ட் என்ற இடத்தில் இருந்து கலிபோர்னியாவின் ஆன்டரியோ நகரை நோக்கி 171 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் விமானம் ஒன்று கிளம்பியது. விமானம், 16,325 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென அதன் கதவுகள் திறந்து கொண்டன. இதனால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து விமானம் உடனடியாக, போர்ட்லாண்ட் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top