Connect with us
Raj News Tamil

Raj News Tamil

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர விசாரணை

இந்தியா

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர விசாரணை

கர்நாடகா மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட் உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் மோப்ப நாயுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சோதனையிட்ட போலீசாருக்கு சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மர்ம நபர் போன் செய்த நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top