Connect with us

Raj News Tamil

ஆடையில் இருந்த ரத்தக்கறை.. தவறாக நினைத்த அண்ணன்.. 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..

இந்தியா

ஆடையில் இருந்த ரத்தக்கறை.. தவறாக நினைத்த அண்ணன்.. 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..

மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள உல்லாஸ் நகரை சேர்ந்தவர் பிரிஜேஷ். 30 வயதாகும் இவர், தனது மனைவி மற்றும் 12 வயது தங்கையுடன் வசித்து வந்துள்ளார். சிறு வயதிலேயே பெற்றோர் உயிரிழந்துவிட்டதால், தனது தங்கையை பிரிஜேஷ் தான் வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சிறுமியின் ஆடையில் ரத்தக் கறை இருப்பதை, பிரிஜேஷ் பார்த்துள்ளார். இதுகுறித்து சிறுமியிடம் கேட்டதற்கு, அவர் பதில் ஏதும் கூறாமல், திணறியுள்ளார். இதனால், தனது தங்கை யாருடனோ பாலியல் உறவில் ஈடுபட்டதாக சந்தேகம் அடைந்துள்ளார்.

இதையடுத்து, தனது தங்கையை 4 நாட்கள் அடித்து சித்ரவதை செய்த அவர், உடல் முழுவதும் சூடு வைத்திருக்கிறார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு, சிறுமிக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பிரிஜேஷை கைது செய்தனர்.

பின்னர், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, சிறுமிக்கு முதன்முறையாக மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத அவர், தனது அண்ணன் எழுப்பிய கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் திணறியுள்ளார்.

இதனை தவறாக புரிந்துக் கொண்ட பிரிஜேஷ், அவரை கொடுமைப்படுத்திக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. மாதவிடாய் ரத்தத்தை, உடலுறவு வைத்துக் கொண்டதால் ஏற்பட்டது என்று தவறாக நினைத்துக் கொண்டு, 12 வயது சிறுமியை, அவரது அண்ணனே கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top