Connect with us

Raj News Tamil

காங்கிரஸ் வாரிசு அரசியலின் சின்னமாகவே திகழ்கிறது: பிரதமர் மோடி!

இந்தியா

காங்கிரஸ் வாரிசு அரசியலின் சின்னமாகவே திகழ்கிறது: பிரதமர் மோடி!

காங்கிரஸ் கட்சியானது ஊழல் மற்றும் வாரிசு அரசியலின் சின்னமாகவே திகழ்ந்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: “ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஆளும் கட்சியினர் அதிகாரத்தை திருடர்கள் மற்றும் குண்டர்களிடம் ஒப்படைத்து விட்டனர்.

ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இருப்பதால் ராஜஸ்தான் முழுவதும் சமூக விரோதிகள் அதிகரித்து வருகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றமிழைப்பவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.

ஊழல் மற்றும் வாரிசு அரசியல் ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரிகளாகும். ஆனால் காங்கிரஸ் கட்சியானது ஊழல் மற்றும் வாரிசு அரசியலின் சின்னமாகவே திகழ்ந்து வருகிறது.” என்று மோடி பேசினார்.

More in இந்தியா

To Top