தமிழகம்
மீண்டும் இந்தியாவில் உச்சம் தொடும் கொரோனா..! இதுவரை 5 போ் பலி..!
இந்தியாவில் சமீபகாலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.மேலும் ஜே.என்.1 எனும் புதிய வகை கொரோனா பரவல் பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.தற்போது வரை கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் 5 போ் கொரோனா பாதிப்பால்உயிரிழந்துள்ளனா்.அதாவது,ஹரியானா , கர்நாடகா, தமிழ்நாடு,கேராளவில் இருவா் என மொத்தம் 5 போ் பலியாகியுள்ளனா்.நாடு முழுவதும் கணக்கிடும்பொழுது, 4,440 போ் தற்போது வரை கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.