தமிழகம்
கழிவுநீரில் விழுந்த பசுமாடு.. உயிருக்காக நடந்த ஒரு மணி நேர போராட்டம்.. இறுதியில் நடந்தது என்ன?
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சாரதாம்பாள் நகரைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமான பசு மாடு, மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம்.
அந்த வகையில், இன்று மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு, அப்பகுதியில் இருந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், அங்கு வந்த அவர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி, கழிவுநீர் தொட்டியில் சிக்கிய பசுமாட்டை மீட்டனர். துரிதமாக செயல்பட்டு, பசுமாட்டின் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்புத்துறையினரை, அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
You must be logged in to post a comment Login