தமிழகம்
“என்ன காப்பாத்துங்க.. என்ன காப்பாத்துங்க” – நள்ளிரவில் கதறிய பெண்..! ஓடி வந்து பார்த்த பொதுமக்கள்.. ஷாக்!
80 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் விழுந்த பெண்ணை, தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி. விவாசயம் செய்து வரும் இவர், தனது கால்நடைகளின் பராமரிப்பு பணிகளை நேற்று இரவு செய்தார்.
பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, வீட்டிற்கு திரும்பும்போது, 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், தீயனைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், தமிழரசியை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login