Connect with us

Raj News Tamil

கல்லூரி வளாகத்தில் மாணவர் தற்கொலை!

தமிழகம்

கல்லூரி வளாகத்தில் மாணவர் தற்கொலை!

3 ஆண்டு படிக்கும் மாணவர் கல்லூரி வளாகத்தில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மகன் குணால் (21) என்ற மாணவர் திருச்செங்கோடி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் மாலை கச்சுப்பள்ளியை அடுத்த எட்டிகுட்டைமேடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் குணாலின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தேடுதல் பணியை தொடர்ந்தனர்.

இதற்கிடையே, கல்லூரியின் மேல்மாடியில் பெற்றோர்கள் ஏறிப் பார்த்தபோது குணால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குணாலின் உடலை கைப்பற்றி எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

More in தமிழகம்

To Top