Connect with us

Raj News Tamil

மனைவி பிரிந்து சோகத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

தமிழகம்

மனைவி பிரிந்து சோகத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை புழல் கதிர்வேடு வஉசி நகர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (29), திருமணம் ஆகி மனைவி பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இவர் சிறிய கூலி வேலைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் குடிபோதைக்கு அடிமையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நண்பர்களுடன் மது அருந்திவிட்டு தன் மனைவியின் ஞாபகம் வந்து கொண்டே இருப்பதாகவும் கூறியுள்ளார். அதன்பின் கதிர்வேடு வஉசி நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காலையில் வீட்டிற்கு சென்று பார்த்தவர்கள் இளையராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் புழல் காவல்துறைக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இளையராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in தமிழகம்

To Top