தமிழகம்
பல்லாவரத்தில் பிரியாணி கடை ஊழியரை தாக்கிய திமுகவினர்!
பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பம்மல் நாகல்கேணி எம்ஜிஆர் சிலை எதிரே முகில் பிரியாணி கடையை அன்வர் பாஷா நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டி நாகல்கேணி, 12-வது திமுக வட்ட செயலாளர் ஸ்ரீதர் தனது கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பேனர் வைத்துள்ளார்.
நடைபாதை முழுவதும் ஆக்கிரமித்தும், கடையை மறைக்கும் வகையில் பேனர்கள் வைப்பதற்கும் ஊழியர் எதிர்ப்பு தெரிவித்து பேனரை தள்ளி வைக்குமாறு தெரிவித்தனர்.
வட்டச் செயலாளர் ஸ்ரீதர் மற்றும் அவருடன் வந்த சிலர், பிரியாணி கடை ஊழியர் மீனாட்சி உள்ளிட்ட கடையில் பணிபுரியும் ஊழியர்களிடம் வாக்குவாதில் ஈடுப்பட்டு திடிரென பிரியானி கடை ஊழியரை கடுமையாக தாக்கினர்.
திமுகவினர் கடை ஊழியரை தாக்கும் இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
மேலும் பிறந்த நாள் முடிந்து 3 நாட்களாகியும் இன்னும் பேனர் அகற்றப்படவில்லை மேலும் இதனால் கடையில் வியாபாரம் நடக்கவில்லை என ஊழியர் வேதனை தெரிவித்துள்ளார்.