தமிழகம்
எடப்பாடி கே.பழனிச்சாமி சந்தித்து வாழ்த்து பெற்ற: திமுக முன்னாள் அமைச்சரின் மருமகள்!
திமுக முன்னாள் அமைச்சரும் 3 மூன்று முறை திமுக துணை பொதுச்செயலாளராக இருந்த எஸ்பி சற்குண பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
நேற்று (06.03.24) அதிகாரப்பூர்வமாக தன்னை அதிமுகவில் இணைத்து கொண்ட சிம்லா முத்துச்சோழன் இன்று சென்னை பசுமை வழி சாலை இல்லத்தில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.