உலகம்
ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…வெளியேற்றப்பட்ட பார்வையாளர்கள்
பிரான்ஸில் அமைந்துள்ள ஈபிள் கோபுரம் உலகப் புகழ் பெற்ற சின்னங்களுள் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் அதிக அளவிலான பார்வையாளர்கள் வருகை புரிவது வழக்கம்.
இந்நிலையில் இன்று ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து கோபுரத்தின் மூன்று தளங்களில் உள்ள பார்வையாளர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு இருக்கிறதா என சோதனை நடத்தினர். இந்த சம்வபம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.