Connect with us

Raj News Tamil

ஒடிசாவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி..சரக்கு ரயில் மோதி 6 பேர் உயிரிழப்பு..!!

இந்தியா

ஒடிசாவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி..சரக்கு ரயில் மோதி 6 பேர் உயிரிழப்பு..!!

ஒடிசா மாநிலம் ஜஜ்புர் ரயில் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் மழையின் காரணாமாக ரயில் பெட்டியின் கீழே ஒதுங்கியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ரயில் ஏறியதால் 6 ஊழியர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காற்றின் வேகத்தால், சரக்கு பெட்டிகள் உருண்டு விபத்து ஏற்பட்டதாக ரயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து உயர் மட்ட குழு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top