Trending
பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்..!
ஹரியானா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வருகிறார். இவரது அமைச்சரவையில் சந்தீப் சிங் விளையாட்டு துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
முன்னாள் ஒலிம்பிக் வீரரான இவர், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜூனியர் தடகள பயிற்சியாளர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அந்த பயிற்சியாளர் கூறியதாவது : “அவருடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும், அதற்காக எனக்கு பல வசதிகளைச் செய்து தருவதாகவும் அமைச்சர் சந்தீப் சிங் தெரிவித்தார். ஆனால், அதற்கு நான் சம்மதிக்கவில்லை. இதனால் அவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்” என்றும் கூறியிருந்தார். இது ஹரியானா மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது.
இதனை தொடர்ந்து அந்த ஜூனியர் தடகள பயிற்சியாளர் போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் அமைச்சர் சந்தீப் சிங் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்த சண்டிகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விளையாட்டு துறை அமைச்சர் சந்தீப் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
You must be logged in to post a comment Login