Connect with us

Raj News Tamil

சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழை நீடிக்கும்..!!

வானிலை

சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழை நீடிக்கும்..!!

இலங்கை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை கொட்டி வருகிறது. அதிகப்பட்சமாக கொளத்தூரில் 14 சென்டி மீட்டர் மழையும் திருவிக நகர் மற்றும் அம்பத்தூர் தலா 12 சென்டி மீட்டர் மழையும் அண்ணாநகரில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாலையில் தொடங்கிய மழை தற்போது வரை விடாமல் பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர். தஞ்சாதவூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

More in வானிலை

To Top