Connect with us

Raj News Tamil

ஒரு சின்ன பிரச்சனை.. மனைவியை கோடாறியால் வெட்டி கொன்ற கணவன்..

இந்தியா

ஒரு சின்ன பிரச்சனை.. மனைவியை கோடாறியால் வெட்டி கொன்ற கணவன்..

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் கிராண்டிபாலி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் பிதானி. இவருக்கு திருமணமாகி, லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று, நாராயணனும், அவரது மனைவியும், உறவினர் ஒருவரின் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது, கணவன்-மனைவி இருவருக்கும் இடையே, சிறிய பிரச்சனை காரணமாக, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், கடும் ஆத்திரம் அடைந்த நாராயணன், அங்கிருந்த கோடாறியை எடுத்து, தனது மனைவியை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், நாராயணனை கைது செய்தனர். ஒரு சிறிய விஷயத்திற்காக, கணவனே மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top