Connect with us

Raj News Tamil

மகள் கண்முன்னே.. தாய்க்கு நடந்த கொடூரம்..

இந்தியா

மகள் கண்முன்னே.. தாய்க்கு நடந்த கொடூரம்..

கர்நாடகா மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள பாண்டவ்வூர் பகுதியை சேர்ந்தவர் பர்வதம்மா. இவர் தன்னுடைய மகள் அர்பிதாவுடன், நேற்று இரவு கோயிலுக்குச் சென்றுள்ளார்.

சாமி தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் கத்தியால் பர்வதம்மாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பர்வதம்மாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த அவர்கள், கொலைக்கான காரணம் குறித்து, பல்வேறு கோணங்களில், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகள் கண்முன்னே, தாய் படுகொலை செய்யப்பட்ட இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top