தமிழகம்
ஜல்லிக்கட்டு போட்டியில் இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை-ஐகோர்ட் உத்தரவு..!
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டிற்கு அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து கமிட்டி அமைத்து நடத்த கோரிய வழக்கு நேற்று , மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள் மதுரை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்த எந்த தடையும் இல்லை எனவும் தனிநபரோ, மாவட்ட நிா்வாகத்தால் அங்கீகரிக்கபடாத குழுவில் இல்லாத நபா்களோ போட்டியின் போது ஏதும் இடையுயூறு செய்யக்கூடாது.இதை மீறினால் ,அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என ஐகோர்ட் மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.