Connect with us

Raj News Tamil

சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியாளர் – மு.க.ஸ்டாலின் இரங்கல்!

தமிழகம்

சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியாளர் – மு.க.ஸ்டாலின் இரங்கல்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு ஊடகங்களில் செய்தியாளராகப் பணியாற்றி வந்த முத்துக்குமார் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். இவர் நேற்றிரவு கங்கைகொண்டான் பகுதியில் செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தாழையூத்து அருகே நாய் ஒன்று குறுக்கே வந்தது.

அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதனையடுத்து, முத்துக்குமார் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செய்தியாளர் முத்துக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

More in தமிழகம்

To Top