Connect with us

Raj News Tamil

விஜய் இப்படி பண்ணுவாரு-னு நான் எதிர்பார்க்கல – கீர்த்தி சுரேஷ்

சினிமா

விஜய் இப்படி பண்ணுவாரு-னு நான் எதிர்பார்க்கல – கீர்த்தி சுரேஷ்

விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

மகாநதி படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை வென்ற இவர், தற்போது ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், மகாநதி படத்தை பார்த்துவிட்டு, நடிகர் விஜய் எனக்கு செல்போனில் அழைப்பு விடுத்து, பாராட்டினார். இதுமட்டுமின்றி, சார்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போதும், என்னை அவர் பாராட்டினார்.

இதை நான் அவரிடம் இருந்து சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அப்படி சொல்ல வேண்டும் என்ற அவிசயம் அவருக்கு இல்லை. இருந்தாலும் சொன்னார் என்று கீர்த்தி சுரேஷ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top