Connect with us

Raj News Tamil

உயரமான சிகரத்தில் ஏறி சாதனை படைத்தகேரள வீரர்!

உலகம்

உயரமான சிகரத்தில் ஏறி சாதனை படைத்தகேரள வீரர்!

கேரளாவை சேர்ந்தவர் ஷேக் ஹசன்கான் (36). மாநில அரசு ஊழியரான இவர் தனது ஓய்வு நாட்களில் உலகின் மிக உயர்ந்த மலை சிகரங்களில் ஏறி தொடா் சாதனைகளை செய்து வருகிறார். அந்தவகையில் எவரெஸ்ட், தெனாலி (வட அமெரிக்கா), கிளிமாஞ்சாரோ (ஆப்பிரிக்கா), எல்ப்ரஸ் (ஐரோப்பா) ஆகிய சிகரங்களில் ஏற்கெனவே ஏறியுள்ளார்.

இதனைத்தொடா்ந்து முற்றிலும் பனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான சிகரமான வின்சனில் ஏற முடிவு செய்தார். இதற்காக அங்கு சென்ற ஷேக் ஹசன்கான், கடும் சவால்களை கடந்து வின்சன் சிகரத்தில் ஏறி இந்திய கொடியை பறக்க விட்டுள்ளார்.

உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் வின்சன் சிகரத்தில் இந்திய கொடியை பறக்கவிட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள ஷேக் ஹசன்கானுக்கு பாராட்டுகளும் , வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top