Connect with us

Raj News Tamil

கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து! – 2 பேர் உயிரிழப்பு!

தமிழகம்

கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து! – 2 பேர் உயிரிழப்பு!

திருச்சி அருகே ஸ்ரீரங்கம்-சமயபுரம் சுங்கச்சாவடியை இணைக்கும் கொள்ளிடம் ஆற்று பாலத்தில் இன்று காலை வேகமாக சென்ற ஒரு கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது.

சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் கார் முழுவதுமாக சேதமடைந்து அதில் பயணம் செய்த கேரளா தம்பதி உயிரிழந்தனர். கேரள மாநில இடுக்கியைச் சேர்ந்த ஸ்ரீநாத் தனது மனைவியுடன் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in தமிழகம்

To Top