இந்தியா
நெருங்கிய நண்பனின் ஆணுறுப்பை வெட்டி வீசிய நபர்! இதுலாம் ஒரு காரணமா?
ஒடிசா மாநிலம் ராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் பகபத் தாஸ். 30 வயதாகும் இவர், தனது ஆண் நண்பர் அக்ஷ்யாவுடன், பென்டா கடற்ரைக்கு சென்றுள்ளார். அப்போது, நண்பர்கள் இரண்டு பேருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த அக்ஷ்யா, பகபத் தாஸின் ஆணுறுப்பை வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் அலறித் துடித்த அவரை, மற்ற நண்பர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அக்ஷ்யாவை தேடி வருகின்றனர். சாதாரண வாக்குவாதத்திற்காக, நெருங்கிய நண்பரின் ஆணுறுப்பை ஒருவர் வெட்டியுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login