Connect with us

Raj News Tamil

ஒரே நிலம்.. இரண்டு பேருக்கு விற்பனை.. மைனா பட தயாரிப்பாளர் கைது..

சினிமா

ஒரே நிலம்.. இரண்டு பேருக்கு விற்பனை.. மைனா பட தயாரிப்பாளர் கைது..

மைனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனவர் ஜான் மேக்ஸ். ஆனால், அதன்பிறகு வேறு எந்த படத்தையும் தயாரிக்காமல் இருந்த இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் இவர் மீது ஆவடி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

அதில், மோகனவேல் என்பவருக்கு ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான நிலத்தை விற்பனை செய்ததாகவும், பின்னர் அதே நிலத்தை, வேறொருவருக்கும் விற்பனை செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.

எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், ஜான் மேக்ஸ் மோசடியில் ஈடுபட்டது, உறுதியானது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் அதிரடி கைது செய்துள்ளனர்.

மைனா பட தயாரிப்பாளர் நில மோசடியில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top