இந்தியா
முதல் திருமணத்தை மறைத்த கணவன்.. ஏன் என்று கேள்வி கேட்ட 2-வது மனைவி மீது ஆசிட் வீச்சு..!
ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியை சேர்ந்தவர் சந்தன் ராணா. 32 வயதான இவரும், பனிதா சிங் என்ற பெண்ணும், கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு, இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், சந்தன் ராணாவிற்கு, ஏற்கனவே திருமணமாகியிருப்பதை, பனிதா சிங் கண்டறிந்தார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால், கோபம் அடைந்த சந்தன் ராணா, மாமியார் வீட்டிற்கு சென்று, மனைவியை அழைத்துள்ளார். ஆனால், அவர் வராததால், மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து, அந்த பெண்ணின் முகத்தில் வீசியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி, பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள சந்தன் ராணாவை தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்திற்கு தூண்டுதலாக இருந்த சந்தன் ராணாவின் முதல் மனைவியை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login