Connect with us

Raj News Tamil

ஒடிசா ரயில் விபத்து…ரயில்வே ஊழியர்கள் 3 பேர் கைது

இந்தியா

ஒடிசா ரயில் விபத்து…ரயில்வே ஊழியர்கள் 3 பேர் கைது

ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜூன் 2 ம் தேதி பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 290 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் ஒடிசா ரயில் கோர விபத்து தொடர்பான விசாரணையில் 3 ரயில்வே ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை 5 நாள் காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக, விசாரணைக்காக மூவரையும் ஏழு நாட்கள் காவலில் வைக்க சிபிஐ கோரியிருந்தது, ஆனால் நீதிமன்றம் 5 நாட்கள் மட்டுமே அவகாசம் அளித்தது.

More in இந்தியா

To Top