Connect with us

Raj News Tamil

தமிழ்நாட்டிற்கு 3,000 கனஅடி காவிரி நீர் திறக்க உத்தரவு!

தமிழகம்

தமிழ்நாட்டிற்கு 3,000 கனஅடி காவிரி நீர் திறக்க உத்தரவு!

தமிழகத்துக்கு 3,000 கன அடி காவிரி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அக்.11 தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு அக்.16 முதல் அக்.30-ம் தேதி வரை தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

அதன்படி இன்று பிற்பகல் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது.

இதில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பிரிந்துரையை ஏற்று, தமிழகத்துக்கு வருகிற அக்.30 ஆம் தேதி வரை தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீரைக் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

More in தமிழகம்

To Top