Connect with us

Raj News Tamil

“உங்களுக்கு துணிவு கிடையாது” – தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பா.ரஞ்சித்!

தமிழகம்

“உங்களுக்கு துணிவு கிடையாது” – தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பா.ரஞ்சித்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பா.ரஞ்சித். தலித் மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து இவர் எடுத்துள்ள அனைத்து திரைப்படங்களும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.

சினிமாவில் அரசியல் பேசுவது மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு அவர் குரல் எழுப்பி வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ள விஷயம் குறித்து தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தொடரூம் சமூக அநீதி!புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடூம் கண்டனங்கள்!!” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “வன்கொடுமைகள் எதிர்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே, பலரது கவனங்களை பெற்று வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top