தமிழகம்
மதுரை புதூரில் கிளிகள் பறிமுதல் !
மதுரையின் பல பகுதிகளில் கிளிகள் வீடுகளில் வளர்ப்பதாக வனத்துறைக்கு கிடைத்த தகவலின் பெயரில் கடந்த இரு வாரத்திற்கு செல்லூர் பகுதியில் வனத்துறையினர் வீடு வீடாக சென்று கிளிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஜூலை 17ஆம் தேதிக்கு வரை வீடுகளில் வளர்க்கப்படும் கிளிகளை ஒப்படைக்க வேண்டும் மீறினால் வனத்துறை சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் (ஜூலை.17) நேற்று வரை 600க்கும் மேற்பட்ட கிளிகள் மதுரை புதூரில் கண்டுபிடிக்கப்பட்டு வனத்துறையில் ஒப்படைக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரி கூறும் போது இந்த கிளிகள் அனைத்தும் திண்டுக்கல், விருதுநகர், தேனி, திருச்சி ஆகிய பகுதிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு உடல்நலம் தேறிய பின் அவை பறக்க விடப்படும் என தெரிவித்தார்.