தமிழகம்
எச்சரிக்கையை மீறி அலையின் அருகே சென்று செல்பி எடுக்கும் நபர்கள்..!!
மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. ஏற்கனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளதுறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
காசிமேடு எண் 4 துறைமுக வார்ப்பு பகுதியில் கடல் அலையானது சீற்றமுடன் காணப்படுகிறது. இந்நிலையில் பாறைகள் மீது மோதி சீறிவரும் அலையின் அருகே காலையிலேயே செல்பி எடுக்க இளைஞர்கள் வர தொடங்கியுள்ளனர்.
பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டும் கூட இளைஞர்கள் இது போன்று ஆபத்தை உணராமல் செல்பி மோகத்தால் இந்த பகுதிக்கு வந்துள்ளனர்.
உடனடியாக இங்கு போலீசார் கண்காணிப்பு பணிக்கு அமர்த்தினால் மட்டுமே செல்பி மோகம் கொண்டவர்களின் கூட்டம் குறையும் என்றும் அசம்பாவிதங்களை முன்னரே தடுக்க முடியும் என்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.