Connect with us

Raj News Tamil

பிரதமர் மோடி பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டார் – அமித்ஷா பெருமிதம்

அரசியல்

பிரதமர் மோடி பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டார் – அமித்ஷா பெருமிதம்

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, ஐந்து ஆண்டுகளாக நக்சல்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை பிரதமர் மோடி ஒழித்துவிட்டார்.

ஓட்டு வங்கிக்காக அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் காங்கிரசார் பங்கேற்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த பிரதமர் மோடி உழைத்துள்ளார்.

அனைவருடைய சொத்துக்களும் கணக்கெடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது என அவர் பேசியுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top