Connect with us

Raj News Tamil

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு.. 3 பேரை கைது செய்த போலீஸ்..

தமிழகம்

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு.. 3 பேரை கைது செய்த போலீஸ்..

உசிலம்பட்டி அருகே, தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த 3 பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏழுமலை பஜார் பகுதியில், தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதாக, ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலை அறிந்த காவல்துறையினர், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த, சிங்கராஜ், ராமராஜன், ராஜேந்திரன் ஆகிய 3 பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து, 184 லாட்டரி சீட்டுக்களையும், 23 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top