Connect with us

Raj News Tamil

“ஜாக்கிரதையா இருங்க.. குண்டர் சட்டம் பாயும்” – எச்சரிக்கை விடுத்த காவல்துறை கண்காணிப்பாளர்!

தமிழகம்

“ஜாக்கிரதையா இருங்க.. குண்டர் சட்டம் பாயும்” – எச்சரிக்கை விடுத்த காவல்துறை கண்காணிப்பாளர்!

நாகை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில், தனிப்படை காவல்துறையினர், வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து வந்த வாகனத்தை, காவல்துறையினர் சோதனை செய்தனர்.

அதில், 500-க்கும் மேற்பட்ட மதுப்பாட்டில்கள், கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட பால்பாண்டி, உதயகுமார் ஆகியோரை, காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர், காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுபாட்டில்களை கடத்தும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று தெரிவித்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top