Connect with us

Raj News Tamil

கிராண்ட்மாஸ்டா் பட்டத்தை வென்றார் பிரக்ஞானந்தா சகோதரி வைஷாலி..!

விளையாட்டு

கிராண்ட்மாஸ்டா் பட்டத்தை வென்றார் பிரக்ஞானந்தா சகோதரி வைஷாலி..!

ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடர் பிரிட்டனில் நடைபெற்றது. மகளிர் பிரிவில் நடைபெற்ற இறுதி சுற்றில் மங்கோலிய வீராங்கனை பத்குயாக் முங்குதுலை, இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை வைஷாலி எதிர்கொண்டார். இப்போட்டி டிராவில் முடிந்ததால், 8.5 புள்ளிகள் பெற்று முன்னிலை வகித்த வைஷாலி தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதன் மூலம் அடுத்தாண்டு கனடாவில் நடைபெற உள்ள மகளிருக்கான செஸ் கேன்டிட் தொடரில் விளையாடவும் வைஷாலி தேர்வாகி உள்ளார். மேலும் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தோடு 20 லட்சம் ரூபாயையும் அவர் பரிசுத் தொகையாக வென்றுள்ளார்.

இவரது சகோதரரான பிரக்ஞானந்தா ஏற்கெனவே கிராண்ட்மாஸ்டராக இருக்கும் நிலையில், தற்போது வைஷாலியும் இப்பட்டத்தை வென்று உலகின் முதல் உடன்பிறந்தோா் கிராண்ட் மாஸ்டா்கள் என்ற சாதனையை இருவரும் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in விளையாட்டு

To Top