Connect with us

Raj News Tamil

ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி யாத்திரை இன்று நிறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

அரசியல்

ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி யாத்திரை இன்று நிறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2022-ம் ஆண்டு ‘பாரத ஒற்றுமை யாத்திரை’யை செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கி, 2023-ம் ஆண்டு ஜனவரியில் ஸ்ரீநகரில் நிறைவு செய்தார். சுமார் 4 ஆயிரம் கி.மீ. தூரம் அவர் நடந்தே இந்த யாத்திரையை மேற்கொண்டு இருந்தார்.

2-வது கட்ட யாத்திரையை கடந்த ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கினார்.

திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி பொதுமக்களை சந்தித்து, ஆங்காங்கே மக்கள் கூட்டத்தினர் மத்தியில் ரகுல்காந்தி பேசிவாறு இந்த யாத்திரை நடைபெற்று வந்தது.

இதன் நிறைவு நாளான இன்று மும்பை தாதரில் உள்ள அம்பேத்கரின் நினைவிடத்தில் யாத்திரையை நிறைவு செய்கிறார்.

பின்னர் இன்று மாலையில் மும்பை சிவாஜி பார்க்கில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்து உள்ளது.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பேசுகிறார். இதில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உட்பட இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி உள்ளிட்ட மற்ற கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top