Connect with us

Raj News Tamil

ரஷ்யா: இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு; பலி எண்ணிக்கை 93-ஆக உயர்வு!

உலகம்

ரஷ்யா: இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு; பலி எண்ணிக்கை 93-ஆக உயர்வு!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற இடத்தில் 6200 பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட இசையரங்கில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

அப்போது ஐ.எஸ்.ஐ.எஸ். நபர்கள் 5 பேர் ரஷ்ய ராணுவ உடை அணிந்து கொண்டு இசை நிகழ்ச்சியின் அரங்கிற்குள் நுழைந்து அங்கிருந்த பார்வையாளர்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இந்த துப்பாக்கிசூட்டில் 60 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்பட்ட சூழலில், இந்த கொடூரத் தாக்குதலில் இதுவரை 93 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top