இந்தியா
பாதுகாப்பு வளையத்தை தாண்டி ஓடிவந்த இளைஞர் : பிரதமர் மோடி பாதுகாப்பில் மீண்டும் குளறுபடி
கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் நடைபெறும் இளைஞர் தின விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று வந்தார். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பேரணியாக சென்றார்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அனைத்து பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி இளைஞர் ஒருவர் பிரதமருக்கு மாலை அணிவிக்க ஓடி வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட பாதுகாவலர்கள், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி இழுத்து சென்றனர். பாஜக ஆளும் மாநிலத்திலேயே பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
மாலை அணிவிக்க வந்த இளைஞரை பிடித்து கர்நாடக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#WATCH | Karnataka: A young man breaches security cover of PM Modi to give him a garland, pulled away by security personnel, during his roadshow in Hubballi.
— ANI (@ANI) January 12, 2023
(Source: DD) pic.twitter.com/NRK22vn23S
You must be logged in to post a comment Login