Connect with us

இறப்பிலும் இணைபிரியாத பாசமலர்கள்..!

தமிழகம்

இறப்பிலும் இணைபிரியாத பாசமலர்கள்..!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (104). இவர், வயது மூப்பு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் அவரது தம்பி துரைசாமி (102)க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து அக்கா இறந்த தகவலை அறிந்த சிறிது நேரத்திலேயே துரைசாமி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அக்கா உயிரிழந்த அதிர்ச்சியில் தம்பியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top