Connect with us

Raj News Tamil

புகை பிடிப்பதால் ஒரு ஆண்டுக்கு இத்தனை கோடி பேர் உயிரிழக்கிறார்களா??

ஆரோக்கியம்

புகை பிடிப்பதால் ஒரு ஆண்டுக்கு இத்தனை கோடி பேர் உயிரிழக்கிறார்களா??

புகையிலைப் பழக்கமே, பல்வேறு நோய் பரவ முக்கிய காரணியாகவும், அதிகமான இறப்புக்கு காரணமாகவும் விளங்குகிறது. புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் உடலின் ஆரோக்கியத்திற்கு கேடுதான் அதிகமாகும்.

புகை பிடிக்கும் பழக்கத்தால் உலகில் ஆண்டுதோறும் 2 கோடி பேர் உயிரிழப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

புகழ்பெற்ற லான்செட் மருத்துவ இதழில் ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் புகை பழக்கம், மது அருந்துதல், உடல் பருமன், ஹெச்பிவி வைரஸ் தொற்று ஆகிய 4 காரணங்களால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கானோர் இறப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய 7 நாடுகளில் புகை பிடிப்பதால் புற்றுநோய் ஏற்பட்டு ஆண்டுதோறும் 13 லட்சம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் மற்ற நாடுகளில் ஏற்படும் இறப்புகளை காட்டிலும், இது அதிகம் என அந்த ஆய்வு கூறுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in ஆரோக்கியம்

To Top