Connect with us

Raj News Tamil

சுடு களிமண் பொம்மை பயிற்சி..அசத்திய துருக்கி மாணவர்கள்

இந்தியா

சுடு களிமண் பொம்மை பயிற்சி..அசத்திய துருக்கி மாணவர்கள்

துருக்கியிலிருந்து உயர்கல்வி மாணவர்கள், கல்வி மற்றும் கலாச்சார பயணமாக புதுச்சேரி வந்துள்ளனர். கிராமப்புறங்களுக்கு சென்று அங்குள்ள கலாச்சாரம், பாரம்பரியம் குறித்து டெரகோட்டா பத்மஸ்ரீ முனுசாமியிடம் கைவினை பயிற்சி பெற்றனர்.

ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி மற்றும் கலாச்சார சுற்றுலாவாக புதுச்சேரி வருகின்றனர். இவர்கள் புதுச்சேரியில் உள்ள கல்வி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவைகள் குறித்து அறிந்து கொள்ள இந்த கல்விச் சுற்றுலா பயன்படுகிறது.

அந்த வகையில் தற்போது துருக்கி நாட்டில் இருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட உயர் கல்வி மாணவர்கள் புதுச்சேரி வந்துள்ளனர். அவர்கள் இங்குள்ள கலை, கல்வி, கலாச்சாரம் குறித்து தெரிந்துகொள்ள இருக்கின்றனர். பாரம்பரிய கலையான சுடு களிமண் பொம்மை செய்யும் பயிற்சியை புதுச்சேரி அருகே திருகாஞ்சியில் பத்மஸ்ரீ முனுசாமியிடம் பயின்றனர். 

இதுகுறித்து சுடு களிமண் கலைஞர் பத்மஸ்ரீ முனுசாமி கூறுகையில்: ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து மாணவர்கள் புதுச்சேரி வருகின்றனர். அவர்கள் கல்வி, கலை, கலாச்சாரம் குறித்து பல்வேறு இடங்களுக்குச் சென்று தெரிந்து கொள்கின்றனர். அந்த வகையில் அழிவின் விளிம்பில் இருக்கும் சுடு களிமண் பொம்மை செய்வது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளித்ததாக கூறினார். 

இது குறித்து புதுச்சேரி மாணவி கூறுகையில் : துருக்கி நாட்டில் இருந்து உயர் கல்வி மாணவர்கள் கலை மற்றும் கலாச்சார சுற்றுலாவாக புதுச்சேரி வந்திருக்கிறார்கள். அவர்கள் இங்குள்ளவர்களோடு பழகி அவர்களின் கலை, பண்பாடு, பாரம்பரியம் குறித்து தெரிந்துகொள்ள இருக்கின்றனர். பத்மஸ்ரீ விருது பெற்ற முனுசாமி சுடு களிமண் பொம்மை செய்வது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். மேலும் இவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று அங்குள்ள கலாச்சாரம், பாரம்பரியம் குறித்து தெரிந்து கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top