Connect with us

Raj News Tamil

வங்கி மோசடி புகாரில் சிக்கிய அஜித் பவார் குடும்பத்திற்கு க்ளீன் சீட்..!!

தேர்தல் 2024

வங்கி மோசடி புகாரில் சிக்கிய அஜித் பவார் குடும்பத்திற்கு க்ளீன் சீட்..!!

கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் குடும்பத்திற்கு மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு கிளீன் சீட் வழங்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே 5 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற இருக்கும் 2வது கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியில் ரூ.25,000 கோடி மோசடி செய்த வழக்கில், துணை முதல்வர் அஜித் பவார், அவரது மனைவி சுனேத்ரா பவார் ஆகியோர் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) அறிக்கை சமர்பித்துள்ளது.

பிரதமர் மோடி இந்தக் குற்றச்சாட்டை எழுப்பி, இது ஊழல் குடும்பம் என்று கூறினார். ஆனால், இன்று அவருக்கு க்ளீன் சீட் வழங்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டு பாஜகவில் இணைந்த தலைவர்கள் அனைவருக்கும் க்ளீன் சீட் வழங்கப்பட்டுள்ளது என உத்தவ் தாக்கரே சிவசேனா (யுபிடி) தலைவர் ஆனந்த் துபே கூறியுள்ளார்.

அஜித் பவரின் மனைவி சுனேத்ரா பவார், பாராமதி தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.கூட்டுறவு வங்கி மோசடி குறித்த புகாரில்தான் தற்போது அவர்களுக்கு சாதகமாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தேர்தல் 2024

To Top