Connect with us

Raj News Tamil

“துக்க வீட்டிலும் காசு பார்க்க நினைக்காதீங்க” – மாநாடு தயாரிப்பாளர் அதிரடி பதிவு!

சினிமா

“துக்க வீட்டிலும் காசு பார்க்க நினைக்காதீங்க” – மாநாடு தயாரிப்பாளர் அதிரடி பதிவு!

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, சமீபத்தில் தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மரண வீட்டில் கூட காமிரா வைத்து காசு பார்க்க ஒரு கூட்டம் வந்துவிட்டது.. மீடியா என்ற பெயரில் சிலரும்… மீடியா இல்லாமல் செல்போனைத் தூக்கிக் கொண்டு படம்பிடிக்கும் பலரும் பெருகிவிட்டார்கள்.

நமது இழப்பு அவர்களுக்கு லைக்கும்… காசும். நமது துக்கத்தை அவர்களது துக்கமாக பார்க்கத் தவறுகிறார்கள். துக்க வீட்டிலாவது இனி காமிரா அனுமதியில்லை என்ற முடிவெடுக்க வேண்டும்.

நம் வீட்டில் நாம் யாரை அனுமதிக்க வேண்டும். கூடாது என்ற முடிவையாவது அனைவரும் இணைந்து எடுக்க வேண்டும்.

இல்லையேல் துக்க வீட்டைக் கூட கொண்டாட்ட நிகழ்வு போல மாற்றிவிடுகிறார்கள். கொடுமையான நிகழ்வு இது. இதுபோன்ற நிகழ்வுகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டிய ஒன்று”

இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Content பெற வேண்டும் என்ற நோக்கத்தில், ஊடகம் என்ற போர்வையில், சில Youtube சேனல்கள் இவ்வாறு செய்து வருவதாகவும், இது கண்டிக்கதக்கது என்றும் நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

More in சினிமா

To Top