தமிழகம்
ஆக்ரோஷமாக அரசு பேருந்தை துரத்திய யானை! பிறகு என்ன நடந்தது இதோ ?
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைப்பாதைகளில் கடந்த சில நாட்களாக வனவிலகங்குகளின் நடமாட்டம் அதிகாித்துவருகிறது.இதனால் அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை இயக்கி வருகின்றனா்.மேலும், இதனால் வாகன ஓட்டிகள் எச்சாிக்கையுடன் வாகனத்தை இயக்குமாறு வனத்துறையினா் அறிவுறித்தி வருகின்றனா்.
இந்நிலையில், மஞ்சூா்-கெத்தை சாலையில் வாகனங்கள் வழக்கம் போல் சென்றுகொண்டிருந்தன. அப்போது யானைகள் சாலையின் நடுவே நின்றுகொண்டிருந்ததால், வாகன ஓட்டிகள் சாலையோரமாக
வாகனத்தை நிறுத்தினா். அப்பொழுது உதகை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை நோக்கி யானை ஒன்று திடீரென ஆக்ரோசமாக ஓடி வந்தது. இதனை அறிந்து சுதாாித்துகொண்ட அரசு பேருந்து ஓட்டுநா் வாகனத்தை பின்நோக்கி செலுத்தினாா்.சிறிது தூரம் சென்றதும் யானை நின்று தனது யானை கூட்டங்களுடன் திரும்பி சென்றது. இதனால் பீதியடைந்த பயணிகள் , பேருந்து ஓட்டுநா் இலாபகமாக வாகனத்தை இயக்கியதால் எவ்விதசேதமும் இன்றி உயிா்தப்பினா்.
யானைக்கூட்டங்கள் காட்டுக்கள் சென்றதால் பின்னா் வழக்கம் போல்
வாகனங்கள் இயக்கப்பட்டன.