தமிழகம்
புதுச்சேரியில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த மாணவி ஆர்த்தி கடந்த சனிக்கிழமை அன்று விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென மாயமானார்.
இது குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே அவரது வீட்டின் அருகில் உள்ள வாய்க்காலில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆர்த்தி சாக்கு மூட்டையில் பிணமாக வீசப்பட்டு மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு ஆர்த்தியின் உடல் இன்று அவர் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அப்பொழுது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்த்திக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
அப்போது ஆர்த்தி விளையாடிய அனைத்து பொருட்களையும் வைத்து அவர் தாய் விளக்கேற்றி வழிபட்டு கதறி அழுத சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்த்தியின் தாய் கதறி அழுதது நெஞ்சை பதற வைக்கும் அளவிற்கு இருந்தது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகும் வருகிறது.
இந்நிலையில், மாணவிக்கு வழக்கப்படி சடங்குகள் செய்து முடிக்கப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது.
இறுதி ஊர்வலத்தில் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று கண்ணீர் விட்டு அழுது மாணவி ஆர்த்தியை வழி அனுப்பி வைத்தனர்.