தமிழகம்
விரைவில் திரைப்படமாகிறது நாங்குநேரி உண்மை சம்பவம்..!!
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் சில நாள்களுக்கு முன்னா் பள்ளி மாணவரும், அவரது சகோதரியும் சக மாணவா்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில், விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படமாக வெளியாக உள்ளது. ‘கால் டாக்ஸி’ என்கிற படத்தை இயக்கிய பி.பாண்டியன் இப்படத்தை இயக்குகிறார். கே.டி. கம்பைன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.