தமிழகம்
இளைஞரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து நகை, பணம் பறித்து அடித்து துரத்திய காவலர்!
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் 5-வது பட்டாலியன் காவல் படையில் பணிபுரிந்து வருபவர் அப்துல் ரஹ்மான். இவர் ஓரின சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் (Grindr-Gay chat)ஆப் ஒன்றில் கொரட்டூரை சேர்ந்த கவியரசு (24) என்பவரை தொடர்பு கொண்டு ஓரின சேர்க்கையில் ஈடுபட அழைத்துள்ளார்.
அதன்படி கவியரசு அப்துல் ரஹ்மான் கூறியபடி திருமுல்லைவாயலில் உள்ள காவலர் குடியிருப்புக்கு வந்துள்ளார். அங்கு அவர்களது அறையில் அப்துல் ரஹ்மான், அவரது தம்பி மற்றும் 3 நண்பர்கள் கவியரசுவிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட அவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதன்பின்பு அங்கிருந்த காவலர் உள்பட அனைவரும் கவியரசுவை சரமாரியாக தாக்கி கொடுமை படுத்தியுள்ளனர். மேலும் கவியசுவிடமிருந்து 3 அரை சவரன் தங்க நகை செயின் மற்றும் 25,000 ரூபாய் பணத்தினை போன் பே மூலம் பெற்று கொண்டு அடித்து துரத்தியுள்ளனர்.
இதன் பின்னர் அங்கிருந்து தப்பித்த கவியரசு அருகிலிருந்த திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை காவலர் குடியிருப்புக்கு சென்று சோதனை நடத்தினர். காவலர்கள் வருவதை அறிந்துகொண்ட அப்துல் ரஹ்மான், அவரது தம்பி மற்றும் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஒடி உள்ளனர்.
அதில் காவலர் அப்துல் ரஹ்மான் மற்றும் சரண்ராஜ் ஆகிய இருவரை பிடித்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அப்துல் ரஹீம் மற்றும் சரண்ராஜ் இருவரையும் அம்பத்தூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரைத் தேடி வருகின்றனர்.
காவலர் ஒருவர் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு பணம் நகை பறித்த சம்பவம் பொது மக்களிடையே பாதுகாப்பு இன்மையும் அப்பகுதியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.