Connect with us

Raj News Tamil

பூக்கள் விலை இரண்டு மடங்கு உயர்வு!

தமிழகம்

பூக்கள் விலை இரண்டு மடங்கு உயர்வு!

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில், விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களில் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்கப்பட்ட இருந்த நிலையில், இன்று அதிரடியாக ரூ.1,500 உயர்ந்துள்ளது.

400 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ தற்போது 800 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரளிப்பூ 200 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லைப்பூ 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பூக்களின் வரத்து குறைந்துள்ளதன் காரணமாக விலை அதிகரித்து காணப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

More in தமிழகம்

To Top