Connect with us

Raj News Tamil

சிறுமிக்கு பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த மாணவன்!

இந்தியா

சிறுமிக்கு பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த மாணவன்!

டெல்லியில் பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன்.

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6 வயது சிறுமி படித்து வந்துள்ளார். வழக்கம் போல் சிறுமி பள்ளி பேருந்தில் வீட்டுக்கு சென்றுள்ளார். பேருந்தில் இருந்து வீட்டு திரும்பிய சிறுமி மிகவும் சோர்வாக இருப்பதை பார்த்த தாய் சிறுமிடம் விசாரித்துள்ளார்.

அப்போது பேருந்தில் வரும்போது சிறுமியை மூத்த மாணவர் ஒருவர் பாலியல் ரீதியில் துன்புறத்திய அதிர்ச்சிகர சம்பவம் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளித்தபோதும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வந்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து இந்த விவகாரம் டெல்லி மகளிர் ஆணையத்தின் கவனத்துக்கு சென்றது. பின்பு டெல்லி மகளிர் ஆணையம் இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு ரோகின் நகர போலீஸ் துணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி மாணவனை போலீசார் நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in இந்தியா

To Top